'விவசாய நிலங்களை எடுக்காமல் வளர்ச்சி திட்டங்கள் வராது'
'விவசாய நிலங்களை எடுக்காமல் வளர்ச்சி திட்டங்கள் வராது'
ADDED : ஆக 28, 2026 11:06 PM
சென்னை: சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - பாலகிருஷ்ண ரெட்டி: ஓசூர் விமான நிலைய திட்டத்துக்காக, விவசாய நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓசூரில் ஏற்கனவே அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு, விவசாயிகள் நிலங்களை கொடுத்து விட்டனர்.
அங்குள்ள தனியார் விமான நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து, விவசாயிகள் நிலத்தை எடுக்க முயற்சிப்பது, விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பரந்துாரில் 80 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில், விவசாயிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, விமான நிலைய திட்டத்தை அரசு கைவிட்டுள்ளது. இதேபோல், ஓசூர் விவசாயிகள் நலனையும் கருத்தில் வைத்து, விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: உறுப்பினர்கள் சார்பில், வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வருகின்றன. வளர்ச்சி திட்டங்க ளை செயல்படுத்த, விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தவிர்க்க முடியாதது. விவசாய நிலங்களை எடுக்காமல், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
