sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராசேந்திர சோழனின் பிறந்தநாளில் ஏரியில் மேம்பாட்டுப் பணி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

/

ராசேந்திர சோழனின் பிறந்தநாளில் ஏரியில் மேம்பாட்டுப் பணி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ராசேந்திர சோழனின் பிறந்தநாளில் ஏரியில் மேம்பாட்டுப் பணி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ராசேந்திர சோழனின் பிறந்தநாளில் ஏரியில் மேம்பாட்டுப் பணி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

4


ADDED : ஜூலை 23, 2025 07:32 AM

Google News

4

ADDED : ஜூலை 23, 2025 07:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''ராசேந்திர சோழனின் பிறந்தநாளில் சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணி மேற்கொள்ளப்படும்'' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் எனப் பெரும்புகழ் எய்திய தமிழ் மாமன்னர் இராசேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட 2021ம் ஆண்டு ஆணை பிறப்பித்தது நமது திராவிட மாடல் அரசு.

அவரது தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழப் பேரரசின் வரலாற்றுச் சிறப்புகளையும் கடல் கடந்த வணிகத் தொடர்புகளையும் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்து, அதற்கும் கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினேன். காண்போரைக் கவர்ந்திடும் வண்ணம் அது எழுந்து வருகிறது.

இவற்றின் தொடர்ச்சியாக, ராசேந்திர சோழனின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணிகளும், சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us