ADDED : ஜன 11, 2025 07:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீரங்கம், திருவல்லிகேணி பார்த்தசாரதி கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நடந்த வைகுண்ட ஏகாதசி விழாவின்போது, பக்தர்களை தரிசிக்க விடாமல் ஆளும் கட்சியினரும், அதிகாரிகளும் பெரும்பான்மையாக ஆக்கிரமித்துள்ளனர்.
ஒரு புறம் நாத்திகம் என்ற பெயரில் ஹிந்து நம்பிக்கையை கொச்சைப்படுத்தி பேசியும், வேற்று மத நம்பிக்கையை உயர்த்தி பிடிப்பவராக இருந்து கொண்டும் இருக்கும் இந்த திராவிட மாடல் அரசியல்வாதிகள், கோவில் விழாக்களில் முன்னிலையில் நின்று பக்தர்களை அவமதிக்கின்றனர். அதே கோவிலில் திருட்டு நடக்கும் போதோ, கோவில் நம்பிக்கைக்கு அவமதிப்பு ஏற்படும் போதோ, இவர்கள் யாரும் குரல் கொடுக்க முன் வருவதில்லை.
காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில தலைவர், ஹிந்து முன்னணி

