sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆடி முதல் வெள்ளி; அம்மன் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்

/

ஆடி முதல் வெள்ளி; அம்மன் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்

ஆடி முதல் வெள்ளி; அம்மன் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்

ஆடி முதல் வெள்ளி; அம்மன் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்

5


ADDED : ஜூலை 18, 2025 10:55 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 10:55 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை முதலே பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

ஆடி முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சி கமாட்சி அம்மன், திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில்களில் அதிகாலை 2 மணி முதலே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு, அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை முதல் பெண் பக்தர்கள் அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி, வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மடப்புரம் காளி கோயில்


இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில், காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. பெண்கள் நெய் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். மடப்புரம் காளி கோயிலில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது.

ஆடி மாதம் முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில்களில் சுவாமிக்கு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் காளியம்மன் கோயிலில் அமைந்துள்ள மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கே.கே. புதூர் தெரு எண் - 8ல் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் மூலவர் அம்மன் வேப்பிலைகளுக்கு நடுவே மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


பிரசாதம், அன்னதானம்


கோவை பெரிய கடை வீதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோயில், அவினாசி ரோட்டில் அமைந்துள்ள தண்டு மாரியம்மன் கோயில், காட்டூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், விளையாட்டு மாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us