ADDED : ஜன 08, 2024 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : விடுமுறை நாளை முன்னிட்டு நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று ராமேஸ்வரம் வந்தனர். அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள்.
இதன்பின் கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் தரிசனம் செய்தனர். பஸ் ஸ்டாண்ட், கோயில் மேலவாசல், அக்னி தீர்த்தம் கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் வாகனங்கள் நிறுத்த முடியாமல் பயணிகள் சிரமப்பட்டனர்.