sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆயுதப்படை டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் மத்திய அரசு பணிக்கு மாற்றம்!

/

ஆயுதப்படை டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் மத்திய அரசு பணிக்கு மாற்றம்!

ஆயுதப்படை டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் மத்திய அரசு பணிக்கு மாற்றம்!

ஆயுதப்படை டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் மத்திய அரசு பணிக்கு மாற்றம்!


ADDED : ஜன 19, 2025 08:20 PM

Google News

ADDED : ஜன 19, 2025 08:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஐ.பி.எஸ்., அதிகாரி மகேஷ்குமார் அகர்வால் மத்திய பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழக காவல்துறை ஆயுதப்படை டி.ஜி.பி.யாக இருப்பவர் மகேஷ்குமார் அகர்வால். அவர் தற்போது, மத்திய பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

அவருக்கு எல்லை பாதுகாப்புப் படை கூடுதல் இயக்குநர் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மகேஷ்குமார் அகர்வால் இந்த பதவியில் 4 ஆண்டுகள் வரை இருப்பார்.

பஞ்சாபைச் சேர்ந்த மகேஷ்குமார் அகர்வால் 1972ம் ஆண்டு பிறந்தவர். தந்தையை போல சட்டம் படித்துவிட்டு, காவல்துறையில் நுழைந்தவர். 1994ம் ஆண்டு 22 வயதில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்தவர்.

தேனி எஸ்.பி. தூத்துக்குடி எஸ்.பி.,யாக பணியாற்றி பின்னர் 2001ம் ஆண்டு சென்னைக்கு மாற்றப்பட்டார். பூக்கடை துணை கமிஷனர், போக்குவரத்து துணை கமிஷனர் பதவிகளில் இருந்த அவர், சி.பி.ஐ., அதிகாரியாக 10 ஆண்டுகள் பணியாற்றி மீண்டும் சென்னை திரும்பியவர்.

2020ம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனராக பணியாற்றியவர். சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் இவரது தலைமையிலான சி.பி.சி.ஐ.டி., தான் கொள்ளையர்களை கைது செய்தது.

சென்ட்ரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பு, சென்னை பெண் என்ஜினியர் உமா மகேஸ்வரி கொலை போன்ற வழக்குகளில் திறம்பட விசாரணை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us