sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்க்க ஜாபர் சாதிக் நிதி அளித்தாரா? என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை

/

ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்க்க ஜாபர் சாதிக் நிதி அளித்தாரா? என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை

ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்க்க ஜாபர் சாதிக் நிதி அளித்தாரா? என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை

ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்க்க ஜாபர் சாதிக் நிதி அளித்தாரா? என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை


ADDED : மார் 06, 2024 11:48 PM

Google News

ADDED : மார் 06, 2024 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்க்க, அரபிக் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்கு நிதியுதவி அளித்தனரா என்பது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சென்னை சாந்தோம் அருளானந்தம் தெருவில் வசிப்பவர் ஜாபர் சாதிக், 36; தி.மு.க.,வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தார்.

அதிகாரிகள் ஆய்வு


சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவராகச் செயல்பட்ட இவரையும், இவரின் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும், டில்லியைச் சேர்ந்த மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர். மூவரும் வெளிநாடுகளுக்கு தப்பியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஜாபர் சாதிக்கின் எட்டு வங்கிக் கணக்குகள், முகமது சலீம் மற்றும் மைதீனின் ஆறு வங்கிக் கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அவற்றில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்க்க, மூவரும் நிதியுதவி செய்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அவர்கள் கூறியதாவது:

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022ல் குண்டு வெடிப்பு நடத்திய ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார்.

இவரது தலைமையில், 12க்கும் மேற்பட்டோர் தற்கொலை படையினராக மாறி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தமிழகம் முழுதும் பல கட்டங்களாக சந்தேக நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்யப்பட்டது.

அப்போது சிக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ததில், மூளைச்சலவை செய்யப்பட்ட வாலிபர்களுக்கு, சென்னை, கோவையில் உள்ள அரபிக் கல்லுாரியில் பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக, அரபிக் கல்லுாரிகளின் பேராசிரியர், முன்னாள் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில், சில பணப் பரிவர்த்தனைகள் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.

அவை பற்றிய விபரத்தை, டில்லியைச் சேர்ந்த மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தோம்.

அவர்கள், தற்போது போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து, பணப் பரிவர்த்தனை குறித்து நாங்கள் கொடுத்த தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளனர்.

ஆயுதப் பயிற்சி


அதில், ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் அரபிக் கல்லுாரி பேராசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் வாயிலாக, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்க்க, ஆயுதப் பயிற்சி அளிக்க நிதியுதவி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனால், ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் மற்றும் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஜாபர் சாதிக் வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களை, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது, வெவ்வேறு பெயர்களில் மூன்றுக்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகளை ஜாபர் சாதிக் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.

தாய்க்கு சம்மன்



சென்னை சாந்தோம் அருளானந்தம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில், டில்லி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஒட்டியுள்ள, 'சம்மன்' நோட்டீசை, ஜாபர் சாதிக் தாய் படம் பிடித்துள்ளார்; அந்த நோட்டீசையும் கிழித்துள்ளார். எதற்கான படம் பிடித்தார்? அந்தப் படம், ஜாபர் சாதிக்கிற்கு அனுப்பப்பட்டதா; மகனின் போதைப்பொருள் கடத்தல் தொழிலுக்கும், ஜாபர் சாதிக் தாய்க்கும் தொடர்பு உள்ளதா என, முறைப்படி சம்மன் அனுப்பி விசாரிக்க இருப்பதாக, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us