sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருப்பரங்குன்றத்தில் மதநல்லிணக்க வழிபாடு 'பப்ளிசிட்டி'க்காக அறிவித்தாரா செல்வப்பெருந்தகை; அனுமதி கேட்டு விண்ணப்பிக்காத நிலையில் ரத்து என 'கெத்து'

/

திருப்பரங்குன்றத்தில் மதநல்லிணக்க வழிபாடு 'பப்ளிசிட்டி'க்காக அறிவித்தாரா செல்வப்பெருந்தகை; அனுமதி கேட்டு விண்ணப்பிக்காத நிலையில் ரத்து என 'கெத்து'

திருப்பரங்குன்றத்தில் மதநல்லிணக்க வழிபாடு 'பப்ளிசிட்டி'க்காக அறிவித்தாரா செல்வப்பெருந்தகை; அனுமதி கேட்டு விண்ணப்பிக்காத நிலையில் ரத்து என 'கெத்து'

திருப்பரங்குன்றத்தில் மதநல்லிணக்க வழிபாடு 'பப்ளிசிட்டி'க்காக அறிவித்தாரா செல்வப்பெருந்தகை; அனுமதி கேட்டு விண்ணப்பிக்காத நிலையில் ரத்து என 'கெத்து'

1


ADDED : பிப் 07, 2025 04:07 AM

Google News

ADDED : பிப் 07, 2025 04:07 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை தலையீட்டால் பிரச்னை ஓய்ந்த நிலையில் காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்த 'மதநல்லிணக்க வழிபாட்டிற்கு' அனுமதி கிடையாது என காங்கிரசாருக்கு போலீசார் எச்சரித்துள்ளனர்.

சென்னையில் நேற்று முன்தினம் பேட்டியளித்த தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை 'திருப்பரங்குன்றத்தில் மதநல்லிணக்க வழிபாடு பிப்.,7 ல் நடத்தப்படும். அனைத்து கட்சியினரும் பங்கேற்பர்' என அறிவித்தார். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கருதிய போலீசார், உடனடியாக உள்ளூர் காங்., நிர்வாகிகளை தொடர்பு கொண்டபோது 'எங்களுக்கே 'டிவி'யை பார்த்துதான் தெரிந்தது' என்று தெரிவித்திருக்கின்றனர்.

வழிபாடு நடத்த முறைப்படி அனுமதி கேட்டு காங்., சார்பில் நேற்றுமுன்தினம் இரவு வரை மனு அளிக்காததால், செல்வப்பெருந்தகை தரப்பை மதுரை போலீசார் தொடர்பு கொண்டபோது 'அண்ணனிடம் கேட்டு சொல்கிறோம்' என தெரிவித்தனர். உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் அடுத்தடுத்து தொடர்பு கொண்டபோது செல்வப்பெருந்தகை தரப்பு அலைபேசியை 'சுவிட்ச் ஆப்' செய்து போலீசாரை 'டென்ஷனாக்கியது'. இதனால் மீண்டும் உள்ளூர் நிர்வாகிகளை தொடர்பு கொண்ட போலீசார், 'தனித்தனியாக வந்து தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை.

கூட்டமாக வந்தால் கைது செய்வோம்' என கட்சித்தலைமைக்கு தகவல் தெரிவித்துவிடுங்கள்' என எச்சரித்தனர்.

ஆனால் இப்படிதான் நடக்கும் என முன்கூட்டியே கணித்த செல்வப்பெருந்தகை மதுரை வருவதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. 'ஒருவேளை அவர் விமானத்தில் வந்துவிட்டால்... ரயிலில் வந்துவிட்டால்...' என பயணிகளின் டிக்கெட்டுகளை போலீசார் ஆய்வு செய்தபோது செல்வப்பெருந்தகை பெயர் இல்லை. 'அவர் வரமாட்டார்.

'பப்ளிசிட்டி'க்காக அறிவித்திருக்கிறார் என போலீசார் புரிந்து கொண்டு வேறு பணிகளில் கவனம் செலுத்தினர்.

இதற்கிடையே போலீசாரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்காத நிலையில், போலீசார் அனுமதி தராததால் 'மதநல்லிணக்க வழிபாடு' ரத்து என காங்கிரஸ் தரப்பில் 'கெத்தாக' அறிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us