sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓடும் பஸ்சில் டீசல் கசிவு சிறுபாக்கம் அருகே பரபரப்பு

/

ஓடும் பஸ்சில் டீசல் கசிவு சிறுபாக்கம் அருகே பரபரப்பு

ஓடும் பஸ்சில் டீசல் கசிவு சிறுபாக்கம் அருகே பரபரப்பு

ஓடும் பஸ்சில் டீசல் கசிவு சிறுபாக்கம் அருகே பரபரப்பு


ADDED : பிப் 04, 2025 06:21 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே ஓடும் அரசு பஸ்சில் டீசல் கசிந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திட்டக்குடியிலிருந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், நைனார்பாளையத்திற்கு நேற்று காலை அரசு டவுன் பஸ் சென்றது. 30 பயணிகளுடன். காலை 10:45 மணியளவில் திட்டக்குடி - சிறுபாக்கம் சாலையில், மங்களூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்தபோது, பஸ்சின் டேங்கிலிருந்து டீசல் வெளியேறி கீழே கொட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். டீசல் வெளியேறுவதை தடுக்க முடியாததால், உடனடியாக பயணிகளை இறக்கி விட்டு, வேறு வாகனங்களில் செல்லுமாறு கூறினர். இதுகுறித்து, போக்குவரத்து பனிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஊழியர்கள் வந்து பஸ்சை எடுத்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களுக்கு பழுதடைந்த அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us