sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.10 கோடி நிலத்தை அபகரிக்க உடந்தை பத்திரப்பதிவு டி.ஐ.ஜி., ரவீந்திரநாத் கைது

/

ரூ.10 கோடி நிலத்தை அபகரிக்க உடந்தை பத்திரப்பதிவு டி.ஐ.ஜி., ரவீந்திரநாத் கைது

ரூ.10 கோடி நிலத்தை அபகரிக்க உடந்தை பத்திரப்பதிவு டி.ஐ.ஜி., ரவீந்திரநாத் கைது

ரூ.10 கோடி நிலத்தை அபகரிக்க உடந்தை பத்திரப்பதிவு டி.ஐ.ஜி., ரவீந்திரநாத் கைது


ADDED : செப் 26, 2024 02:14 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பத்திரப்பதிவு துறையில், சேலம் சரக டி.ஐ.ஜி.,யாக இருப்பவர் ரவீந்திரநாத். அவர், சென்னையில் நிர்வாக பிரிவு மாவட்ட பதிவாளராக இருந்தார்.

தாம்பரம் வரதராஜபுரத்தைச் சேர்ந்த சையது அமீன் என்பவருக்கு சொந்தமான, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, போலி ஆவணம் வாயிலாக, ஒரு கும்பல் அபகரிக்க உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நிலத்தை, காந்தம்மாள் என்பவரின் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.

சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று சேலத்தில் இருந்து ரவீந்திரநாத்தை அழைத்து வந்து, சென்னையில் விசாரணை நடத்தி, கைது செய்தனர்.

கோவையில், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயன்ற வழக்கு தொடர்பாக, கோவையில் சார் - பதிவாளராக இருந்த மணிமொழியான் மற்றும் உதவியாளர்கள் லதா, சபரீஷ் ஆகியோரை கைது செய்திருந்தனர்.

அப்போது, மணிமொழியான் அளித்த வாக்குமூலத்தில், 'நான் தாம்பரத்தில் சார் - பதிவாளராக இருந்தபோது, 300 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்கு போலி ஆவணங்களை சேர்த்தேன்.

'இதற்கு, அப்போது சென்னையில் நிர்வாக மாவட்ட பதிவாளராக இருந்த ரவீந்திரநாத், எட்டு முறை வில்லங்க சான்றில் திருத்தம் செய்ய அனுமதி அளித்து, குற்றத்திற்கு உடந்தையாக இருந்தார்' என, தெரிவித்துள்ளார். இது தொடர்பாகவும் ரவீந்திரநாத்திடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us