sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மனுவுக்கு தீர்வு காணாததால் திண்டுக்கல் கலெக்டர் கார் கண்ணாடி உடைப்பு : போதை வாலிபர் கைது

/

மனுவுக்கு தீர்வு காணாததால் திண்டுக்கல் கலெக்டர் கார் கண்ணாடி உடைப்பு : போதை வாலிபர் கைது

மனுவுக்கு தீர்வு காணாததால் திண்டுக்கல் கலெக்டர் கார் கண்ணாடி உடைப்பு : போதை வாலிபர் கைது

மனுவுக்கு தீர்வு காணாததால் திண்டுக்கல் கலெக்டர் கார் கண்ணாடி உடைப்பு : போதை வாலிபர் கைது

1


UPDATED : பிப் 17, 2025 08:58 PM

ADDED : பிப் 17, 2025 08:23 PM

Google News

UPDATED : பிப் 17, 2025 08:58 PM ADDED : பிப் 17, 2025 08:23 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் நிலப் பிரச்னையை தீர்த்து வைக்க கோரி கொடுத்த மனுவிற்கு தீர்வு காணாததால் விரக்தி அடைந்து போதையில் கலெக்டர் கார் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

பழநி ஆயக்குடி அமர பூண்டியை சேர்ந்தவர் கணேசன் 34. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு சொந்தமாக பகுதியில் 3 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். குடும்ப தேவைகளுக்காக நிலத்தை வைத்து ஒரு வங்கியில் லோன் கேட்க சென்றார். அப்போது வங்கி ஊழியர்கள் இந்த நிலத்திற்கு பட்டா இல்லை என்றனர். இது தொடர்பாக கணேசன், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பிப்.10 ல் நடந்த குறைதீர் கூட்டத்தில் தனது நிலத்திற்கு தடையில்லா சான்று வேண்டுமென பிரச்னையை மனுவாக எழுதி கொடுத்தார். அதிகாரிகள் முறையாக விசாரிக்காத நிலையில் கணேசன்,விரக்தி அடைந்தார்.

இந்நிலையில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்திற்கும் வந்த கணேசன்,தன்னுடைய பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத அதிகாரிகள் மீது ஆத்திரத்தில் இருந்தார். மாலை 6:30 மணிக்கு அதிக மது போதையில் இருந்த கணேசன், திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வாசலில் நின்றிருந்த கலெக்டர் காரின் முன் பக்க கண்ணாடியை கல் வீசி உடைத்தார். அங்கு பாதுகாப்பிலிருந்த போலீசார் கணேசனை, பிடித்து தாடிக்கொம்பு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சேதமான கலெக்டர் கார் அருகிலுள்ள விருந்தினர் மாளிகையில் நிறுத்தி வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us