sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காமராஜரை விமர்சித்த தி.மு.க., நிர்வாகி படத்துக்கு செருப்பு மாலை அணிவித்த காங்.,

/

காமராஜரை விமர்சித்த தி.மு.க., நிர்வாகி படத்துக்கு செருப்பு மாலை அணிவித்த காங்.,

காமராஜரை விமர்சித்த தி.மு.க., நிர்வாகி படத்துக்கு செருப்பு மாலை அணிவித்த காங்.,

காமராஜரை விமர்சித்த தி.மு.க., நிர்வாகி படத்துக்கு செருப்பு மாலை அணிவித்த காங்.,

46


UPDATED : அக் 25, 2024 06:47 AM

ADDED : அக் 23, 2024 04:33 AM

Google News

UPDATED : அக் 25, 2024 06:47 AM ADDED : அக் 23, 2024 04:33 AM

46


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காமராஜரை அவதுாறாக பேசிய, தி.மு.க., மாணவரணி தலைவர் ராஜிவ்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, அவரது படத்திற்கு துடைப்பம், செருப்பு மாலை அணிவித்து, சமூக வலைதளங்களில், காங்கிரசார் எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர்.

சென்னையில் தி.மு.க., இளைஞரணி அலுவலகத்தில் நடந்த விழாவில், காமராஜரை இழிவுப்படுத்தும் விதமாக, ராஜிவ்காந்தி பேசியுள்ளார். இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் மீது தி.மு.க., தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

'அரசியல் புனிதர் காமராஜர் பற்றியும், அவருடைய திட்டங்களை பற்றியும், தியாகங்கள் பற்றியும் அசிங்கமாக பேசிய ராஜிவ்காந்தியே மன்னிப்பு கேள்' என்ற வாசகத்துடன், அவரது படத்திற்கு துடைப்பம், செருப்பு மாலை அணிவித்து, அதை சமூக வலைதளங்களில் காங்கிரசார் பகிர்ந்து வருகின்றனர்.

காங்கிரஸ் பேச்சாளர் சூளை ராமலிங்கம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம், ராஜிவ்காந்தியின் சர்ச்சை பேச்சு குறித்து, புகார் தெரிவித்துள்ளார். செல்வப்பெருந்தகை, இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாக ராமலிங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு பொதுச்செயலர் ஆர்.எஸ்.ராஜன் அறிக்கை: காமராஜர் குறித்த வரலாறு பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாத ராஜிவ்காந்தி, வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. 'காமராஜர் தன் சொந்த நிதியிலா பள்ளிகளை திறந்தார்' என கேட்டுள்ளார். ராஜாஜி மூடிய பள்ளிகளை மட்டுமே காமராஜர் திறந்தார் என, பொய்யான கருத்தை விதைக்க முயன்றுள்ளார். பொறுப்பில்லாத பேச்சுக்காக ராஜிவ்காந்தி வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வருத்தம் தெரிவித்தார் தி.மு.க., ராஜிவ் காந்தி

தி.மு.க., நிர்வாகி ராஜிவ் காந்தி வெளியிட்ட அறிக்கை: புத்தக வெளியீட்டு விழாவில், காமராஜர் குறித்து நான் பேசியது காங்கிரஸ் கட்சியினரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. காமாஜர் மீது பற்று கொண்ட தலைவர்களும் மற்றும் நாடார் சமூக அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும், அவர்களின் வருத்தத்தை தெரிவித்தனர். காமராஜரை சிறுமைப்படுத்தவோ, குறைத்து பேசவோ, தனிப்பட்ட முறையில் எனக்கு எவ்வித தவறான நோக்கமும் இல்லை. காமராஜர் தமிழ்ப்பேரினத்தின் சொத்து. நான் பேசியதன் வாயிலாக மனம் வருந்திய காங்கிரஸ் தொண்டர்களுக்கும், காமராஜரை நேசிக்கும் உறவுகளுக்கும் என் வருத்தத்தை மனதார தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



சீமான் ஒரு மன நோயாளி

'முதல்வராக நான் பொறுப்பேற்றதும், தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் இருக்கிறது. புதிய வாழ்த்துப் பாடலாக பாரதிதாசன் பாடலை வைப்போம்' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அதை விமர்சித்து, தி.மு.க., மாணவர் அணி தலைவர் ராஜிவ்காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:மொழியை அடிமைப்படுத்துகிற மத்திய அரசை எதிர்த்து பேச திராணி இல்லை. தமிழை நீஷபாஷை என சொன்ன ஆரியத்தை எதிர்த்து பேசவில்லை. இயக்கம் நடத்து என சொன்னால், அதை செய்யாமல், தமிழர்களை தீண்டதகாதவர்கள் என சொன்ன மனுதர்மத்தை எதிரி என சொல்லாமல், தமிழ் மொழியை, தமிழகத்தை பாதுகாத்த, பாதுகாக்கும் திராவிட தத்துவத்தை தான் எதிர்த்து பேசுவேன் என, ஒருவர் சொன்னார் என்றால், ஒன்று அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும். இல்லையேல், வயிறு வளர்க்க அரசியலை பிழைப்பாக நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us