sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெண்கள் ஓட்டுகளை கவர தி.மு.க., முடிவு 'டாஸ்மாக்' கடைக்கு மாதத்தின் முதல் நாள் விடுமுறை?

/

பெண்கள் ஓட்டுகளை கவர தி.மு.க., முடிவு 'டாஸ்மாக்' கடைக்கு மாதத்தின் முதல் நாள் விடுமுறை?

பெண்கள் ஓட்டுகளை கவர தி.மு.க., முடிவு 'டாஸ்மாக்' கடைக்கு மாதத்தின் முதல் நாள் விடுமுறை?

பெண்கள் ஓட்டுகளை கவர தி.மு.க., முடிவு 'டாஸ்மாக்' கடைக்கு மாதத்தின் முதல் நாள் விடுமுறை?

47


ADDED : ஆக 08, 2025 03:53 AM

Google News

ADDED : ஆக 08, 2025 03:53 AM

47


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பெண்களின் ஓட்டுகளை கவர, 'டாஸ்மாக்' மது கடைகளுக்கு மாதத்தின் முதல் நாளன்று விடுமுறை அளிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,787 மதுபான விற்பனை கடைகளை நடத்துகிறது. வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்படும் இந்த கடைகளுக்கு, திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உட்பட, ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டுமே விடுமுறை.

தினமும் சராசரியாக 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை நாட்களில் அதிகமாகவும் மது வகைகள் விற்பனையாகின்றன. தனியார் நிறுவன பணியாளர்களுக்கு, மாதத்தின் முதல் நாளில் சம்பளம் வழங்கப்படுகின்றன. சம்பளத்தை முழுதுமாக பணியாளர்கள் வீட்டுக்கு எடுத்து செல்லும் நோக்கில், கேரளாவில் மாதத்தின் முதல் நாளன்று, அனைத்து மது கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதை, தமிழகத்திலும் அமல்படுத்துமாறு, 'டாஸ்மாக்' கடை பணியாளர்கள், அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மதுவிலக்கை அமல்படுத்துமாறு, தி.மு.க., கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ளன. பெண்கள் ஓட்டுகளை கவர, மது கடைகளுக்கு மாதத்தின் முதல் நாள் விடுமுறை அளிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, வரும் சுதந்திர தினத்தில், முதல்வர் ஸ்டாலின் உரையில் வெளியாகவும் வாய்ப்புள்ளது.

பெண்கள் வரவேற்பு கிடைக்கும்! மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அண்டை மாநிலங்களில் மது விற்கப்படுவதால், தமிழகத்தில் மதுவிலக்கிற்கு சாத்தியம் இல்லை. படிப்படியாக மது விற்பனை நேரத்தை இரண்டு மணி நேரம் குறைப்பது, 500 மது கடைகளை மூடுவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின், மாதத்தின் முதல் நாளன்று, மது கடைகளுக்கு விடுமுறை விட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதை அமல்படுத்தினால், பெண்களிடம் வரவேற்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். ***








      Dinamalar
      Follow us