ADDED : பிப் 10, 2024 02:07 AM
சென்னை:தி.மு.க. தலைமை அறிக்கை:
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3076 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 534 படகுகள் கடத்தப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் குறித்தும் மீனவர் நலன் குறித்தும் முதல்வர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தி உள்ளார்.
பிரதமருக்கு 9 கடிதங்களும் வெளியுவுறத்துறை அமைச்சருக்கு 35 கடிதங்களும் எழுதியுள்ளார். ஆனாலும் தமிழக மீனவர்கள் பிரச்னையை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையாடு கையாண்டு வருகிறது. இலங்கை அரசின் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
மத்திய அரசை கண்டித்து நாளை 11ம்தேதி காலை 10:30 மணிக்கு ராமேஸ்வரத்தில் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் கண்டன ஆர்ப்பட்டம் நடக்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.