ADDED : மே 08, 2025 02:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:தேசிய கொடி ஏற்றும் கம்பத்தில் தி.மு.க., கொடி ஏற்றப்பட்டதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கொடைக்கானல் அண்ணா சாலையில் உள்ள கூட்டுறவு பண்டக சாலையில் ஆவின் பாலகம் பூத் திறப்பு விழா நேற்று நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்றார். கூட்டுறவு பண்டகசாலையின் முகப்பில் உள்ள கம்பத்தில் சுதந்திரதினம், குடியரசு தினத்தில் தேசியக் கொடி ஏற்றப்படும். இக்கம்பத்தில் நேற்று தி.மு.க.,வினர் தி.மு.க., கொடியை கட்டினர். அங்கிருந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரத்தில் அகற்றப்பட்டது.