ADDED : ஜூலை 17, 2025 02:41 AM
சென்னை:2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்குடன் தி.மு.க., பணிகளை துவக்கி உள்ளது. இதற்காக 'ஓரணியில் தமிழகம்' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 1ம் தேதி உறுப்பினர் சேர்க்கை துவங்கியது. 15 நாட்களில் 1.35 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனவே மக்கள் மன நிலை, தொண்டர்களின் எண்ண ஓட்டம், ஆகியவற்றை தெரிந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். உறுப்பினர் சேர்க்கையில் தகிடுதத்தம் நடப்பதை தடுக்கவும், அதிக உறுப்பினர்களை சேர்க்கும், மாவட்ட செயலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கவும், குறைவாக சேர்த்த மாவட்டச்செயலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரையும் வழங்க உள்ளார்.
இதற்காக வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இன்று காலை 10:00 மணிக்கு தி.மு.க., மாவட்டச்செயலர்கள் கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.