sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தி.மு.க., அரசு முன்னுரிமை: அண்ணாமலை விமர்சனம்

/

ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தி.மு.க., அரசு முன்னுரிமை: அண்ணாமலை விமர்சனம்

ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தி.மு.க., அரசு முன்னுரிமை: அண்ணாமலை விமர்சனம்

ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தி.மு.க., அரசு முன்னுரிமை: அண்ணாமலை விமர்சனம்

13


ADDED : ஜன 26, 2025 10:37 AM

Google News

ADDED : ஜன 26, 2025 10:37 AM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அரிட்டாபட்டிக்கு தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக உடனடியாகக் முதல்வர் ஸ்டாலின் கிளம்பிச் செல்கிறார் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

அவரது அறிக்கை: ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, பிரியாணி கடை, டீக்கடை என வரிசையாக மன்னிப்பு கேட்கச் சென்ற முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர், தென் தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான போது கூட, அதைக் கண்டுகொள்ளாமல், இண்டியா கூட்டணிப் பேச்சு நடத்த டில்லிக்குச் சென்றதை பொதுமக்கள் மறந்துவிடவில்லை.



தமிழகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், வேங்கைவயல் பிரச்னை தொடங்கி, அண்ணா பல்கலை பாலியல் வன்முறை உட்பட, பொதுமக்கள் சந்தித்த பல்வேறு பிரச்னைகளின் போது, அங்கு சென்று ஆறுதல் கூறாத முதல்வர் ஸ்டாலின் தற்போது, பிரதமர் மோடி விவசாயிகள் நலனுக்காக, மதுரை டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ததும், தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக உடனடியாகக் கிளம்பிச் செல்கிறார் என்றால், இந்த டிராமா மாடல் அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us