sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தை பின்னோக்கி இழுக்கும் தி.மு.க., அரசு; அண்ணாமலை குற்றச்சாட்டு

/

தமிழகத்தை பின்னோக்கி இழுக்கும் தி.மு.க., அரசு; அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகத்தை பின்னோக்கி இழுக்கும் தி.மு.க., அரசு; அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகத்தை பின்னோக்கி இழுக்கும் தி.மு.க., அரசு; அண்ணாமலை குற்றச்சாட்டு

3


ADDED : ஜன 11, 2025 01:00 PM

Google News

ADDED : ஜன 11, 2025 01:00 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அருப்புக்கோட்டை நகரில் அமையவிருந்த புதிய ரயில் பாதையை ரத்து செய்த தி.மு.க., அரசின் முடிவைக் கண்டித்து வரும் 20ம் தேதி பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: நமது பாரதப் பிரதமர் மோடி, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கையில், இங்குள்ள தி.மு.க., அரசு, தமிழகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது.

மதுரை, தூத்துக்குடி இடையே, அருப்புக்கோட்டை வழியாக புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் தி.மு.க., அரசின் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டுள்ளதை, நமது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நேற்று ஊடகங்களில் தெளிவுபடுத்தினார். தமிழகத்தின் பல்வேறு ரயில் திட்டங்களுக்குத் தேவையான 3,389 ஹெக்டேர் நிலத்தில், வெறும் 26% நிலம் மட்டுமே, தி.மு.க., அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளதை, சமீபத்தில் ரயில்வே அமைச்சர் அவர்கள் கூறியிருந்தார்.

அருப்புக்கோட்டை வழியாகச் செல்லும் மதுரை-தூத்துக்குடி புதிய ரயில் பாதைக்கு, சுமார் 870.98 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்டது, ஆனால் தமிழக அரசு வெறும் 74.87 ஹெக்டேர் நிலத்தை மட்டுமே கையகப்படுத்தியுள்ளது. தி.மு.க., அரசின் நத்தை வேகச் செயல்பாடு, இப்போது அருப்புக்கோட்டை மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் தடையாக மாறியுள்ளது.

தி.மு.க., அரசின் இந்த மக்கள் விரோத அணுகுமுறையை தமிழக பா.ஜ., சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். வரும் ஜனவரி 20ம் தேதி, அருப்புக்கோட்டை நகரில், புதிய ரயில் பாதையை ரத்து செய்த தி.மு.க., அரசின் முடிவுக்கு எதிராக, விருதுநகர் மாவட்ட மக்களுடன் இணைந்து, மாபெரும் போராட்டம் நடத்தவிருக்கிறோம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us