sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டாஸ்மாக் ஊழல்வாதிகளை தப்ப வைக்க தி.மு.க., அரசு முயற்சி: அன்புமணி புகார்

/

டாஸ்மாக் ஊழல்வாதிகளை தப்ப வைக்க தி.மு.க., அரசு முயற்சி: அன்புமணி புகார்

டாஸ்மாக் ஊழல்வாதிகளை தப்ப வைக்க தி.மு.க., அரசு முயற்சி: அன்புமணி புகார்

டாஸ்மாக் ஊழல்வாதிகளை தப்ப வைக்க தி.மு.க., அரசு முயற்சி: அன்புமணி புகார்


ADDED : மே 18, 2025 03:55 AM

Google News

ADDED : மே 18, 2025 03:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'டாஸ்மாக் ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை தப்ப வைக்க, தி.மு.க., அரசு முயற்சிப்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:


டாஸ்மாக்கில் நடந்த ஊழல்கள் தொடர்பாக, அமலாக்கத் துறை நடத்தி வரும் சோதனையில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மது கொள்முதல், ஒப்பந்தம் வழங்குவதில் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களால், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் எப்படியெல்லாம் ஆட்டுவிக்கப்பட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

டாஸ்மாக் நிறுவனத்தை ஊழல் சுரங்கமாக தி.மு.க., அரசு மாற்றியுள்ளது. டாஸ்மாக் அரசுக்கு காமதேனுபோல பணத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்களுக்கும் பணம் காய்க்கும் மரமாக உள்ளது.

ஊழலை மூடி மறைக்கும் நோக்குடன், அது தொடர்பான, 40க்கும் மேற்பட்ட வழக்குகளை போதிய ஆதாரங்கள் இல்லை என்று மூடி விடும் முயற்சி நடக்கிறது. ஏற்கனவே, சில வழக்குகள் மூடப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

எந்த ஊழலும் நடக்கவில்லை என்றால், அதை தமிழக அரசு துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், டாஸ்மாக் ஊழல் வழக்கின் விசாரணைக்கு, தமிழக அரசு தொடக்கம் முதல் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இந்த ஊழல் தொடர்பான மூல வழக்குகளை, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு விசாரித்தால், தவறு செய்தவர்கள் தப்ப வைக்கப்பட்டு விடுவர். எனவே, டாஸ்மாக் ஊழல் தொடர்பான, 40க்கும் மேற்பட்ட வழக்குகளை, சி.பி.ஐ., விசாரணைக்கு, தமிழக அரசு மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us