sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.3.50 லட்சம் கோடி கடன் வாங்கியதுதான் தி.மு.க., அரசின் சாதனை: பழனிசாமி

/

ரூ.3.50 லட்சம் கோடி கடன் வாங்கியதுதான் தி.மு.க., அரசின் சாதனை: பழனிசாமி

ரூ.3.50 லட்சம் கோடி கடன் வாங்கியதுதான் தி.மு.க., அரசின் சாதனை: பழனிசாமி

ரூ.3.50 லட்சம் கோடி கடன் வாங்கியதுதான் தி.மு.க., அரசின் சாதனை: பழனிசாமி


ADDED : ஜன 11, 2025 07:19 PM

Google News

ADDED : ஜன 11, 2025 07:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''ஆட்சிக்கு வந்த பின், 3.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியதுதான் தி.மு.க., அரசின் சாதனை,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டியுனார்.

அவர் அளித்த பேட்டி:

தி.மு.க., ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடியப் போகின்றன. இன்னும் 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆட்சிக்கு வந்தால், 'நீட்' தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்தனர். ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு பின் கேட்டால், 'நீட் தேர்வை மத்திய அரசுதான் ரத்து செய்ய முடியும்' என, முதல்வர் கைவிரிக்கிறார். 'நீட்' தேர்வு விவகாரத்தில் மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றி, தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது.

தி.மு.க., ஆட்சியில் அனைத்து அத்தியாவசிப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஓட்டை, உடைசல் பஸ்கள்தான் ஓடுகின்றன. மழை பெய்தால் பஸ்சுக்குள் குடை பிடிக்கும் நிலைதான் உள்ளது.

அனைத்து பஸ்களிலும் பெண்களுக்கு இலவசம் என வாக்குறுதி அளித்தனர். ஆனால், இப்போது சில பஸ்களில் மட்டுமே இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது.

கடன் வாங்கி தான் மகளிர் உரிமை தொகை 1,000 ரூபாய் கொடுக்கின்றனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 3.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. இவ்வளவு கடன் வாங்கியதுதான் தி.மு.க., அரசின் சாதனை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us