sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை: தமிழக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

/

'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை: தமிழக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை: தமிழக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை: தமிழக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

13


ADDED : ஏப் 27, 2025 03:23 PM

Google News

ADDED : ஏப் 27, 2025 03:23 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு அனுமதி தராமல் மக்களை அலைக்கழித்த தி.மு.க., அரசின் அதிகாரப் போக்கு நியாயமற்றது என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள நடுக்குப்பம் பகுதியில், தமிழக பா.ஜ., சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சிக்கு கடைசி நேரத்தில் அனுமதி தராமல் மக்களை அலைக்கழித்த தி.மு.க அரசின் அதிகாரப் போக்கு நியாயமல்ல.

திமுக-வினர் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் உடனடியாக அனுமதியும் போலீஸ் பந்தோபஸ்தும் கொடுக்கும் திமுக அரசு, பிரதமர் மோடி நாட்டு மக்களோடு கலந்துரையாடும் “மனதின் குரல்” நிகழ்ச்சிக்கு இத்தனைக் கெடுபிடிகளை விதிப்பது ஏற்புடையதல்ல.

.

அதுவும் சுமார் 1000 பொதுமக்களுக்கு அறுசுவை விருந்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்காக, ஒரு வாரத்திற்கு முன்பாகவே தமிழக பா.ஜ., சார்பில் காவல்துறையிடம் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்போகும் இறுதி தருணத்தில் அனுமதியில்லை எனக் கூறி, எல்.இ.டி திரை, ஒலிபெருக்கி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த இடத்திலிருந்து நிகழ்ச்சியை வேறொரு புதிய இடத்திற்கு மாற்றியது தி.மு.க அரசின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் நோக்கமேயாகும்.

இருப்பினும் தி.மு.க அரசு குறிப்பிட்டிருந்த அந்த புதிய இடத்தில் எல்.இ.டி., திரைகள் அமைக்கப்படும் வரை ஒலிபெருக்கி மற்றும் கைப்பேசிகள் உதவியுடன் மக்களோடு மக்களாக அமர்ந்து பிரதமர் அவர்களின் “மனதின் குரல்” நிகழ்ச்சியைக் கண்டு களித்தோம்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us