sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ தி.மு.க., தலைமை திருப்திக்காக பேசும் திருமா

தி.மு.க., தலைமை திருப்திக்காக பேசும் திருமா

தி.மு.க., தலைமை திருப்திக்காக பேசும் திருமா


ADDED : ஆக 21, 2025 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 05:52 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ௩௦ நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டாலே, மக்கள் பிரதிநிதிகள் பதவி இழக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இது, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் என, எதிர்க்கட்சியினர் புலம்புகின்றனர். இந்த சட்டம், எல்லாருக்கும் பொதுவானது. மக்கள் பிரதிநிதிகள் யார் குற்றம் செய்திருந்தாலும், தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும். பொது வாழ்வில், அரசியல்வாதிகளுக்கும் நேர்மை வேண்டும் என்பதற்காகவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கேட்டு, போராடி வருகின்றனர். ஆனால், அவர்களுக்காக குரல் கொடுப்பது போல பேசிக் கொண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திடுமென ட்ராக் மாறி, அவர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என பேசியிருக்கிறார். தி.மு.க., தலைமையின் திருப்திக்காக பேசுவதை திருமா வளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

- நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us