sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மத்திய நிதி பெறும் நிர்வாக திறன் தி.மு.க.,வுக்கு இல்லை: பழனிசாமி

/

மத்திய நிதி பெறும் நிர்வாக திறன் தி.மு.க.,வுக்கு இல்லை: பழனிசாமி

மத்திய நிதி பெறும் நிர்வாக திறன் தி.மு.க.,வுக்கு இல்லை: பழனிசாமி

மத்திய நிதி பெறும் நிர்வாக திறன் தி.மு.க.,வுக்கு இல்லை: பழனிசாமி


ADDED : ஜன 23, 2025 09:23 PM

Google News

ADDED : ஜன 23, 2025 09:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'மத்திய அரசிடம் நிதி பெறும் நிர்வாக திறன் தி.மு.க., அரசுக்கு இல்லை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

நுாறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகளுக்கு, இரண்டு மாதங்களாக, தி.மு.க., அரசு சம்பளம் வழங்காததை சுட்டிக்காட்டினால், தங்களது வழக்கமான பாணியான, 'மேலே இருக்கிறவன் பார்த்துப்பான்' என்பது போல, டில்லி பக்கம் கையை நீட்டி, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தப்பிக்க முயற்சிக்கிறார்.

ஏதோ தி.மு.க., ஆட்சி அமைத்த பின் தான் தமிழகத்தை, மத்திய அரசு வஞ்சிப்பது போன்று, அமைச்சர் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. எந்த தேசிய கட்சி ஆட்சியில் இருந்தாலும், நமக்கு முறையாக நிதி வழங்குவதில்லை. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.

அ.தி.மு.க., ஆட்சியில், மத்திய அரசின் நிதி வந்தபோதும், வராதபோதும், மக்களுக்கு சேர வேண்டிய திட்டங்களில் எந்த தொய்வும் ஏற்பட்டதில்லை. அப்படியொரு நிர்வாக திறன்மிக்க ஆட்சியை நாங்கள் நடத்தினோம். உங்களைப் போன்று, எதற்கெடுத்தாலும் டில்லியை கைகாட்டும், 'பொம்மை' ஆட்சி நடத்தவில்லை.

மத்திய அரசிடம் உரிய நிதியைப் பெறுகிற நிர்வாக திறன் இல்லையென்றால், அதை ஒப்புக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us