ADDED : செப் 22, 2025 02:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நாளை தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டம் நடக்க உள்ளது' என, அக்கட்சி பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் கூட்டம், நாளை காலை 10:00 மணிக்கு, சென்னை அறிவாலயத்தில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில், எம்.பி.,க்கள், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.