ADDED : நவ 24, 2024 02:31 AM
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அளித்த பேட்டி:
மஹாராஷ்டிராவில், தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான பா.ஜ., தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களால் வெற்றி பெற்றுள்ளனர்.
வயநாட்டிலே பிரியங்கா வெற்றி பெறுவது, 'வோட் ஜிகாத்' தான் காரணம். வரும், 2026 தேர்தலில், தமிழக அரசியல் சூழ்நிலை என்பது, ஐந்து முனைப்போட்டியாக இருக்கும். தி.மு.க., கூட்டணி, அ.தி.மு.க.,- பா.ஜ.,- த.வெ.க.,- நாம் தமிழர் கட்சி என இருக்கும்.
லஞ்ச ஊழல், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, போதைப்பொருட்களால் தி.மு.க., ஆட்சி போகவேண்டும். 2026 தேர்தலில் தமிழகத்தில், பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் என்பது மக்கள் முடிவு.
ஹிந்துக்களுக்கு ஆதரவாக கருத்து சொல்பவர்கள், பிராமணர்களுக்கு ஆதரவாக யார் கருத்து சொன்னாலும், அவர்களை சிறையில் அடைக்கும் போக்கு சரியானதல்ல. கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது.
இதை எதிர்கொள்ளும் வகையில் வரும், 8ம் தேதி, திருச்சியில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில், பிராமண வழக்கறிஞர்கள், சனாதான வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்த போகிறோம்.
இவ்வாறு கூறினார்.