sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அ.தி.மு.க.,வின் பிள்ளைக்கு பெயர் வைக்கும் தி.மு.க., சேலம் பாராட்டு விழாவில் பழனிசாமி கிண்டல் படைப்புழு பாதிப்பை தடுக்க 186 கோடி ரூபாய் நிதி

/

அ.தி.மு.க.,வின் பிள்ளைக்கு பெயர் வைக்கும் தி.மு.க., சேலம் பாராட்டு விழாவில் பழனிசாமி கிண்டல் படைப்புழு பாதிப்பை தடுக்க 186 கோடி ரூபாய் நிதி

அ.தி.மு.க.,வின் பிள்ளைக்கு பெயர் வைக்கும் தி.மு.க., சேலம் பாராட்டு விழாவில் பழனிசாமி கிண்டல் படைப்புழு பாதிப்பை தடுக்க 186 கோடி ரூபாய் நிதி

அ.தி.மு.க.,வின் பிள்ளைக்கு பெயர் வைக்கும் தி.மு.க., சேலம் பாராட்டு விழாவில் பழனிசாமி கிண்டல் படைப்புழு பாதிப்பை தடுக்க 186 கோடி ரூபாய் நிதி


ADDED : நவ 18, 2024 01:16 AM

Google News

ADDED : நவ 18, 2024 01:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ''மேட்டூர் அணை உபரி நீரை ஏரிகளில் நிரப்புவதால், அனைத்து கட்சி விவசாயிகளும் பலன் அடைகின்றனர்.'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே எம்.காளிப்பட்டியில், நேற்று நடந்த விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில், காவிரி உபரி நீர் நடவடிக்கை குழு தலைவர் வேலன் வரவேற்றார். நிகழ்ச்சியில் விவசாயிகள் பாராட்டை ஏற்றுக்கொண்டு பழனிசாமி பேசியதாவது:

நல்ல திட்டம்


நான் அமைச்சராகும் போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட விவசாயிகள் நடத்தும் பாராட்டு விழாவில் பங்கேற்றதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன்.

ஒரு விவசாயிக்கு தான் மற்ற விவசாயிகளின் நிலை தெரியும். மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற, அமைச்சராக இருந்தபோது, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் தெரிவித்தேன். நல்ல திட்டம் நிறைவேற்றலாம் என அவர் கூறிய நிலையில், துரதிஷ்டவசமாக உயிரிழந்து விட்டார்.

அந்த திட்டத்தைத்தான் முதல்வர் ஆனதும், 565 கோடி ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தினேன். தற்போது, 46 ஏரிகளில் உபரி நீர் நிரப்பப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 100 ஏரிகளிலும் முழுமையாக உபரி நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

மேட்டூர் அணை உபரி நீரை வறண்ட ஏரிகளில் நிரப்புவதால், பாசனத்துக்கு பயன்படுவது மட்டுமின்றி நிலத்தடி நீர்மட்டமும் உயர்கிறது.

உபரி நீரை ஏரிகளில் நிரப்புவதால் அ.தி.மு.க.,வை சேர்ந்த விவசாயிகள் மட்டும் பலனடையவில்லை. அனைத்து கட்சி விவசாயிகளும் பலனடைகின்றனர்.

அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட பல திட்டங்களையும் தி.மு.க., அரசு கிடப்பில் போட்டுள்ளது.

கோட்டையில் இருந்து கோப்புகளை மட்டும் பார்த்தால் போதாது. விவசாயிகளின் உள்மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து, தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க., பெற்ற பிள்ளைக்கு பெயர் வைக்கும் வேலையை மட்டுமே தற்போதைய தி.மு.க., அரசு செய்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

டிராக்டர் பரிசு


பாராட்டு விழாவில் பங்கேற்ற பழனிசாமிக்கு விவசாயிகள், வெள்ளி செங்கோல் பரிசளித்தனர். மேட்டூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் டிராக்டர் பரிசளித்தனர்.

நான் அமைச்சராக இருந்தபோது, விவசாயிகள் சாகுபடி செய்த மக்காசோளத்தை அமெரிக்கன் படைப்புழு தாக்கி சேதப்படுத்தியது. அதற்கு அரசு சார்பில், 186 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் படைப்புழு பாதிப்பை தடுக்க, மருந்துகள் வழங்க, 48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

- பழனிசாமி, முன்னாள் முதல்வர்






      Dinamalar
      Follow us