தி.மு.க., முப்பெரும் விழா கனிமொழிக்கு விருது அறிவிப்பு
தி.மு.க., முப்பெரும் விழா கனிமொழிக்கு விருது அறிவிப்பு
ADDED : ஆக 25, 2025 04:00 AM
சென்னை : கரூரில், செப்., 17ம் தேதி, தி.மு.க., முப்பெரும் விழா நடக்க உள்ளது. அதையொட்டி, விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, தி.மு.க., தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கை:
தி.மு.க., துவக்கப்பட்ட நாள், அண்ணாதுரை, ஈ.வெ.ராமசாமி பிறந்த நாள் ஆகியவை முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா அடுத்த மாதம் 17ம் தேதி கரூரில் நடக்க உள்ளது. விழாவில் விருது பெறுவோர் விபரம்:
ஈ.வெ.ரா., விருது - கனிமொழி, தி.மு.க., துணைப் பொதுச் செயலர்
அண்ணா விருது - சுப.சீத்தாராமன், தி.மு.க., தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினர்
கலைஞர் விருது - சோ.மா.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., அண்ணாநகர்
பாவேந்தர் விருது - சிவராமன், தலைமை செயற்குழு உறுப்பினர்
க.அன்பழகன் விருது - மருதுார் ராமலிங்கம், தி.மு.க., ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவர்
ஸ்டாலின் விருது - பொங்கலுார் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்
இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.