sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., இளைஞரணி மாநாடு கருணாநிதியின் குடும்ப விழா: முன்னாள் அமைச்சர் உதயகுமார் சாடல்

/

தி.மு.க., இளைஞரணி மாநாடு கருணாநிதியின் குடும்ப விழா: முன்னாள் அமைச்சர் உதயகுமார் சாடல்

தி.மு.க., இளைஞரணி மாநாடு கருணாநிதியின் குடும்ப விழா: முன்னாள் அமைச்சர் உதயகுமார் சாடல்

தி.மு.க., இளைஞரணி மாநாடு கருணாநிதியின் குடும்ப விழா: முன்னாள் அமைச்சர் உதயகுமார் சாடல்


ADDED : ஜன 22, 2024 06:31 AM

Google News

ADDED : ஜன 22, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : ''சேலத்தில் நடந்த தி.மு.க., இளைஞரணி மாநாடு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்ப விழா,'' என ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடினார்.

அவர் மேலும் கூறியதாவது: அ.தி.மு.க., பலவீனமாக இருப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல என அமைச்சர் உதயநிதி கருத்து தெரிவித்திருப்பது 'ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதையாக உள்ளது.

சேலம் தி.மு.க., இளைஞரணி மாநாட்டில் தமிழகத்தின் உரிமைகளை மீட்போம் என நாடகத்தை அவர்கள் அரங்கேற்றி வருகின்றனர்.

தமிழகத்திற்கு பிரதமர் மோடியை அழைத்து வந்து விளையாட்டு போட்டிகளை மட்டும் துவக்கி வைத்தார்கள். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டவில்லை.

விளையாட்டு போட்டிகளில் பிரதமரை அழைத்து வந்து விளம்பரப்படுத்துவதில் தி.மு.க.,வினர் முக்கியத்துவம் காட்டுகிறார்கள்.

சட்டசபையில் போட்ட தீர்மானங்களை நிறைவேற்றவில்லை. இளைஞர் அணி மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை குப்பையில் தான் போடுவார்கள் என்றார்.






      Dinamalar
      Follow us