sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்துடன் கோவை இளைஞர்களுக்கு தொடர்பா?

/

ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்துடன் கோவை இளைஞர்களுக்கு தொடர்பா?

ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்துடன் கோவை இளைஞர்களுக்கு தொடர்பா?

ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்துடன் கோவை இளைஞர்களுக்கு தொடர்பா?


ADDED : பிப் 04, 2025 11:35 PM

Google News

ADDED : பிப் 04, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்துடன் கோவை இளைஞர்களுக்கு தொடர்பு உள்ளதா என, தேசிய புலனாய்வு நிறுவனமான, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

தமிழகத்தில், தடை செய்யப்பட்டுள்ள ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்ப்பதாக, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. ஜனவரி, 28 அன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதில், சென்னை புரசைவாக்கத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்த அப்துல் பாசித் என்பவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், அவர் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் என்பதும், சென்னையில் இருந்து கொண்டே ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்க்க, பல மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களை, மூளைச்சலவை செய்ததும் தெரிந்தது.

இதற்காக அவர் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு, பலமுறை வந்து சென்றதும், இங்கு சில நாட்கள் தங்கியிருந்து, இங்குள்ள இஸ்லாமிய இளைஞர்களை, பயங்கரவாத இயக்கத்தில் சேர, மூளைச்சலவை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, கோவைக்கு பாசித் எப்போது வந்தார்; எங்கு தங்கியிருந்தார்; யார் யாரை சந்தித்து பேசினார் என்பது குறித்த விபரங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us