sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.10 மட்டுமே கட்டணம் வாங்கிய டாக்டர் காலமானார்

/

ரூ.10 மட்டுமே கட்டணம் வாங்கிய டாக்டர் காலமானார்

ரூ.10 மட்டுமே கட்டணம் வாங்கிய டாக்டர் காலமானார்

ரூ.10 மட்டுமே கட்டணம் வாங்கிய டாக்டர் காலமானார்


ADDED : ஜூன் 08, 2025 02:41 AM

Google News

ADDED : ஜூன் 08, 2025 02:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, சீனிவாசபுரத்தை சேர்ந்த டி.ஏ.கனகரத்தினம், 96. பட்டுக்கோட்டை பெரிய தெருவில், 1968 முதல் கிளினிக் நடத்தி வந்தார்.

துவக்கத்தில் கனகரத்தினம் இரண்டு ரூபாய் மட்டுமே கட்டணம் பெற்று மருத்துவம் பார்த்து வந்தார். பிறகு 5 ரூபாயாக உயர்த்தினார்.

65,௦௦௦ பிரசவங்கள்


அதன் பிறகு, 1990ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக நோயாளிகளிடம் பெற்று மருத்துவம் பார்த்து வந்தார்.

டாக்டர் கனகரத்தினம் இதுவரை 65,௦௦௦ பிரசவங்களை செய்துள்ளார். இவர் வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் வீட்டில் இருந்த நிலையில் நேற்று இறந்தார்.

இவரது இறப்புக்கு அரசியல் தலைவர்கள், டாக்டர்கள் என பலதரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இறந்த கனகரத்தினம் வாழ்க்கை வரலாறு தொடர்பாக, 'என் வேர்கள் - விழுதுகள்' என்ற தலைப்பில் புத்தகம் எழுதி வரும் கோட்டை அம்பிதாசன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் செல்வம் ஆகியோர் கூறியதாவது:

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கிராமத்தில்,1929ம் ஆண்டு கனகரத்தினம் பிறந்தார். அவரது தந்தை அமிர்தலிங்கம், பர்மாவில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி வந்தார்.

இதனால் கனகரத்தினம் 1939ம் ஆண்டு தொடக்க கல்வியை பர்மாவில் படித்தார். பிறகு உயர்நிலை கல்வியை பட்டுக்கோட்டையில் முடித்தார்.

1957 முதல்


கடந்த 1950ம் ஆண்டு டாக்டர் படிப்பை துவங்கினார். அந்த படிப்பை முடித்து விட்டு, 1957ம் தனியார் கிளினிக் ஒன்றில், டாக்டராக பணியை துவங்கினார். பிறகு தனியாக 1967ம் ஆண்டு தனியாக கிளினிக் துவங்கினார்.

50 ரூபாய் கட்டணம்


பெரும்பாலும் டாக்டர்கள் யாரும் தன் குடும்பத்தினருக்கு பிரசவம் பார்க்க மாட்டார்கள். ஆனால், கனகரத்தினம் தனது மகளுக்கு பிரசவம் பார்த்துள்ளார்.

மனிதநேயமிக்க டாக்டராக விளங்கிய கனகரத்தினம் மகன் சுவாமிநாதன், அவரது மனைவி வர்ஷா இருவரும் டாக்டராக உள்ளனர். அவர்களும் தற்போது, 50 ரூபாய் தான் மருத்துவ கட்டணம் வாங்கி வருகின்றனர்.

இவ்வாறு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us