ஈரமான சுவரில் கை வைக்காதீங்க: மின்வாரியம் எச்சரிக்கை
ஈரமான சுவரில் கை வைக்காதீங்க: மின்வாரியம் எச்சரிக்கை
ADDED : அக் 20, 2025 07:26 AM

சென்னை: வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், பொதுமக்களுக்கு மின் வாரியம் வெளியிட்டுள்ளபாதுகாப்பு அறிவுரைகள்:
மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகே செல்வதை தவிர்க்க வேண்டும்
சாலைகளிலும், தெருக்களிலும், மின் கம்பங்கள், மின் சாதனங்களுக்கு அருகே தேங்கி கிடக்கும் தண்ணீரில் நடப்பதோ, ஓடுவதோ, விளையாடுவதோ, வாகனத்தில் செல்வதோ கூடாது
தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும், மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும்
ஈரமான கைகளால், மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்
வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள, ஈரப்பதமான சுவர்களில் கைவைப்பதை தவிர்க்க வேண்டும்
மின்சார கம்பத்திலோ அல்லது அதற்காக போடப்பட்டுள்ள, 'ஸ்டே ஒயர்' மீதோ, கொடி கயிறு கட்டி, துணி காய வைக்க வேண்டாம். மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கம்பங்களிலோ, கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.