ADDED : மார் 02, 2026 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வீடு உள்ளது. வீட்டின் கதவில் இரு புறமும் இரட்டை இலை சின்னம் இருந்தது. வீட்டுச் சுவரில் அ.தி.மு.க., கொடியின் வண்ணம் தீட்டப்பட்டு இருந்தது.
அவர் தி.மு.க.,வில் இணைந்ததை அடுத்து, வீட்டுக் கதவில் இருந்த இரட்டை இலை சின்னம், 'வெல்டிங்' இயந்திரம் மூலம் நேற்று அகற்றப்பட்டது. இது போல, வீட்டுச் சுவரில், தி.மு.க., கொடியின் வண்ணம் பூசப்பட்டது.
வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார்களில் அ.தி.மு.க., கொடி அகற்றப்பட்டு, தி.மு.க., கொடி பொருத்தப்பட்டது.
இதற்கிடையே, தேனி மாவட்டம் போடியில் உள்ள அவரது அலுவலகத்தில், சுவரில் மாட்டப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் படங்கள் நேற்று முன்தினம் அகற்றப்பட்டன.

