தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'விசில்' சத்தத்தில் தகர்ந்த துரைமுருகன் கோட்டை

 'விசில்' சத்தத்தில் தகர்ந்த துரைமுருகன் கோட்டை

 'விசில்' சத்தத்தில் தகர்ந்த துரைமுருகன் கோட்டை


ADDED : மே 05, 2026 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 05, 2026 02:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காட்பாடி: தி.மு.க., பொதுசெயலரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன், 1996ல் இருந்து, 2026 வரை தொடர்ந்து, 30 ஆண்டுகளாக காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார். தற்போது படுதோல்வியை சந்தித்து, மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

காட்பாடி மக்கள் கூறியதாவது:

காட்பாடி தொகுதியில், வன்னியர், பட்டியல் சமூக மக்கள் பரவலா க உள்ளனர்.

பட்டியல் சமூகத்தவரை தன் வீட் டிற்குள் அனுமதிக்காதவர் துரைமுருகன். தேர்தல் பிரசாரத்தின் போதும், வி.சி., மாவட்ட செயலர் பிலிப்பை, பிரசார வேனில் இருந்து இறங்க சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிலிப், பிற்படுத்தப்பட்ட வகு ப்பை சார்ந்தவர். இதனால் , பட்டியல் சமூக மக்கள் கொந்தளிப்பில் இருந்தனர். வன்னியர் சமூகத்தின் மதிப்புமிக்க இடத்தில் இருந்த துரைமுருகன், வன்னி யர் இடஒதுக்கீடு உள்ளிட்ட தான் சார்ந்த சமூக மக்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கவில்லை.

மேலும், அமைச்சர் ஆதரவாளர்களின் அட்ராசிட்டி, மகிமண்டலம் உள்ளிட்ட விவசாய கிராமங்களில், மக்களின் எதிர்ப்பை மீறி சிப்காட் தொழிற்சாலை அமைக்க முயன்றது ஆகியவை துரைமுருகனின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

மகன், மருமகள் என, அவர் தன் குடும்பத்தினரை அரசியல் களத்திற்குள் புகுத்தியதை மக்கள் விரும்பவி ல்லை. பொ துமக்களின் குறைகளை கே ட்காதது, வெற்றி பெற்றால் சென்னையிலேயே முகாமிடுவது , கா ட்பாடி எம்.எல்.ஏ., அலுவலகத்தை, பல ஆண் டுகளாக பூட்டி வைத்தது ஆகிய வை துரைமுருகன் மீது, மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால் தேர் தலில் தாராளமாக செலவிட்டும், துரைமுருகன் படுதோல்வியை தழுவி இருக்கிறார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us