sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 மதுரையில் அழகிரி வீட்டிற்கு 15 ஆண்டுகளுக்கு பின் சென்ற துர்கா

/

 மதுரையில் அழகிரி வீட்டிற்கு 15 ஆண்டுகளுக்கு பின் சென்ற துர்கா

 மதுரையில் அழகிரி வீட்டிற்கு 15 ஆண்டுகளுக்கு பின் சென்ற துர்கா

 மதுரையில் அழகிரி வீட்டிற்கு 15 ஆண்டுகளுக்கு பின் சென்ற துர்கா


ADDED : நவ 24, 2025 12:11 AM

Google News

ADDED : நவ 24, 2025 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில், டி.வி.எஸ்., நகரில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி வீட்டிற்கு, முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, நேற்று முன்தினம் சென்றார்.

தி.மு.க., தலைவராக கருணாநிதி இருந்தபோது, அழகிரி - ஸ்டாலின் ஆதரவாளர்கள் இடையே 'நீயா நானா' போட்டி நிலவியது. கடந்த 2014ல், அழகிரி பிறந்தநாளையொட்டி ஒட்டப்பட்ட போஸ்டர்களால் சர்ச்சை எழுந்து, அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போது வரை அழகிரி, அவரது ஆதரவாளர்கள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

இதற்கிடையே, கருணாநிதி மறைவுக்கு பின், தி.மு.க., தலைவரான ஸ்டாலின், கடந்த 2021 தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார். அதன்பிறகு, பலமுறை மதுரைக்கு ஸ்டாலின் வந்தாலும், கடந்த ஜூன் மாதம் தான், அழகிரி வீட்டுக்குச் சென்றார்.

இந்நிலையில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, மதுரைக்கு நேற்று முன்தினம் வந்த முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, அழகிரி வீட்டிற்கு சென்றார். அங்கு அழகிரி மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். அழகிரி மகன் திருமணத்துக்காக, கடந்த 2010ல் அவரது வீட்டுக்கு சென்ற துர்கா, 15 ஆண்டுகள் கழித்து நேற்று முன்தினம் சென்றுள்ளார்.






      Dinamalar
      Follow us