ADDED : ஜன 11, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பொங்கல் பண்டிகையையொட்டி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் பெறும் மகளிருக்கு இம்மாதத்திற்குரிய பணம் அவர்களின் வங்கிக் கணக்கில் முன்னதாகவே வரவு வைக்கப்பட்டது.
இந்த மாதம் பொங்கல் பண்டிகை என்பதால் மகளிர் உரிமைத்தொகை நேற்றுமுன்தினம் பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மேல் முறையீடு செய்தவர்களுக்கு இன்னமும் பணம் வழங்கப்படவில்லை.
அரசு ஊழியர்களில் 'சி' மற்றும் 'டி' பிரிவினர் மற்றும் ஆசிரியர்களுக்கு முதல்வர் அறிவித்த பொங்கல் போனஸ் தொகை நேற்று வரவு வைக்கப்பட்டது.