சமத்துவ சமுதாயத்தை அமைப்பதே லட்சியம்: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
சமத்துவ சமுதாயத்தை அமைப்பதே லட்சியம்: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
UPDATED : டிச 06, 2025 12:10 PM
ADDED : டிச 06, 2025 11:58 AM

சென்னை: எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், சமத்துவ, சமுதாயம் அமைய வேண்டும் என்பது தான் நமது லட்சியம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
சமூகம் முன்னேற கல்வி தான் அடிப்படை, அதனால் கல்வியில் அதிக கவனம் செலுத்துகிறோம். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், சமத்துவ, சமுதாயம் அமைய வேண்டும் என்பது தான் நமது லட்சியம்.
முக்கியத்துவம்
ஆட்சிப்பொறுப்பு என்பது நமது லட்சியங்களை திட்டங்கள் மூலமாக வென்றெடுப்பதற்கான வழி. அதனால் தான் நம் ஆட்சி அமையும் போதெல்லாம், விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்து, வாய்ப்புக்களை உருவாக்கி கொடுத்து அவர்களுக்கு உறுதுணையாக விளங்கி வருகிறோம். மாணவர்கள் பட்டப்படிப்போடு நிறுத்திவிட்டாமல் ஆராய்ச்சி படிப்பையும் படிக்க வேண்டும். ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
மைல்கல்
ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ளது. ஆண்டாண்டு காலமாக சமூகத்தில் இருந்த தடைகளை உடைத்து முன்னேறுகிறோம். அடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நமது முன்னேற்றத்துக்கான மைல்கல்களாக அமையும். அரசு திட்டங்களின் பயன் தேவையான நபர்களுக்கு கிடைக்க வேண்டும் என நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

