sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

/

தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து


ADDED : ஏப் 26, 2025 03:13 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தி.மு.க., - எம்.பி., தங்கத்தமிழ்செல்வன், அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., உதயகுமார், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோர் மீதான தேர்தல் விதிமீறல் வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தேனி எம்.பி., தங்கத்தமிழ்செல்வன் மீது, கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல, தேனியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு தரிசனம் செய்ய ஊர்வலமாக சென்றதில், நடத்தை விதிகளை மீறியதாக, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் மீது, உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல, அனுமதியின்றி பட்டாசு வெடித்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., உதயகுமார் மீது, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தினகரன், உதயகுமார் மற்றும் தங்கத்தமிழ்செல்வன் ஆகியோர், தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மூவர் மீதான தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us