sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நேரத்தை வீணடிக்க கூடாது மின் வாரிய தலைவர் அறிவுரை

/

நேரத்தை வீணடிக்க கூடாது மின் வாரிய தலைவர் அறிவுரை

நேரத்தை வீணடிக்க கூடாது மின் வாரிய தலைவர் அறிவுரை

நேரத்தை வீணடிக்க கூடாது மின் வாரிய தலைவர் அறிவுரை


ADDED : பிப் 13, 2025 02:52 AM

Google News

ADDED : பிப் 13, 2025 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,:'நேரத்தை வீணடிக்காமல், கோடை காலத்தில் தடையின்றி மின் வினியோகம் செய்வதை, உறுதி செய்வதற்கான பணிகளை, முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும்' என, பொறியாளர்களுக்கு, மின் வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழக மின் வாரியத் தலைவராக ராதாகிருஷ்ணன், பிப். 10ம் தேதி பொறுப்பேற்றார். இவர், மின் வினியோகம் தொடர்பாக, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று, தலைமைப் பொறியாளர்கள் மற்றும் இயக்குனர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

கூட்டத்தில், அவர் பேசியது குறித்து, பொறியாளர் ஒருவர் கூறியதாவது:

கூட்டத்தில் வாரிய தலைவர், 'அனைவரும் நேரத்தை வீணடிக்காமல், பணியில் முழு கவனம் செலுத்த வேண்டும்; கோடையில் தடையில்லாமல் மின் வினியோகம் செய்வதை உறுதி செய்ய, திட்டமிட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை, முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும்; சென்னையில் கிண்டி உள்ளிட்ட இடங்களில் புதிதாக அமைக்கப்படும், துணைமின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என்றார்.

மேலும், 'ஒவ்வொருவரும், பணியில் தாமதத்திற்கு காரணம் கூறாமல், அதை விரைந்து முடிப்பதற்கான பதில்களை தெரிவிக்க வேண்டும்' என்றும் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us