sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'மின் தடையில்லாத தமிழகம்': அரசு பெருமிதம்

/

'மின் தடையில்லாத தமிழகம்': அரசு பெருமிதம்

'மின் தடையில்லாத தமிழகம்': அரசு பெருமிதம்

'மின் தடையில்லாத தமிழகம்': அரசு பெருமிதம்

32


UPDATED : மே 31, 2024 12:19 PM

ADDED : மே 31, 2024 12:09 PM

Google News

UPDATED : மே 31, 2024 12:19 PM ADDED : மே 31, 2024 12:09 PM

32


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மின்துறையின் முனைப்பான திட்டங்களால், மின் தடையில்லாத மாநிலமாகத் திகழ்கிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 32,595 மெகாவாட்டாக இருந்த மொத்த மின் நிறுவு திறன், தற்போது 36,671 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. 17,785 கி.மீ உயர் அழுத்த மின் பாதைகள், 34,705 கி.மீ தாழ்வழுத்த மின் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 10,779 மெகாவாட் நிறுவு திறனுடன் 54 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மின்துறையின் முனைப்பான திட்டங்களால், மின்தடை இல்லாத மாநிலமாக திகழ்கிறது தமிழகம்.

தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், மின்கட்டமைப்பு ஏப்.30ல் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 454.32 மில்லியன் யூனிட் மின்சாரத்தையும், மே 2ல் 20.830 மெகாவாட் உச்ச மின் தேவையையும் எவ்வித தடங்கலுமின்றி வழங்கி சாதனை படைத்துள்ளது திராவிட மாடல் அரசு. மூன்று ஆண்டுகளாக மின் தடையே இல்லை எனும் வரலாறு படைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் செய்துள்ள சீர்திருத்தங்களால் புதியதாக துணை மின் நிலையங்களை நிறுவி, மின் மாற்றிகளை அமைத்து, மின்விநியோக அமைப்புகள் சீராகச் செயல்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் இந்த அரசை பாராட்டுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சி

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: 20,332 அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி, ரூ.519.73 கோடியில் உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள், 22,931 'ஸ்மார்ட்' வகுப்பறைகள், புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களினால் உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. திராவிட மாடல் அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இந்த செய்திகளே சாட்சி. நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம்தான் இது! பயணத்தைத் தொடர்வோம்! தமிழகத்தை உயர்த்துவோம்!. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.








      Dinamalar
      Follow us