sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆக., 1ல் அறிமுகமாகிறது வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம்

/

ஆக., 1ல் அறிமுகமாகிறது வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம்

ஆக., 1ல் அறிமுகமாகிறது வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம்

ஆக., 1ல் அறிமுகமாகிறது வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம்


ADDED : ஜூலை 26, 2025 12:17 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம், வரும் 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளில், 3.50 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்பை உருவாக்குவதை ஊக்குவிக்கும் விதமாக, 99,446 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா' என்ற திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இத்திட்டம் வரும் 1ம் தேதி முதல் 2027 ஜூலை 31ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1.92 கோடி பயனாளிகள் பயன்பெற உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்திட்டம் இரு வகைகளைக் கொண்டுள்ளது. முதல் வகையில், முதல்முறையாக பணிக்கு சேருபவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், இரண்டாவது வகையில் வேலைவாய்ப்பு அளிக்கும் முதலாளிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஊக்கத்தொகை வழங்கும் விதமாக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us