sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'டாஸ்மாக்' நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதால் 'ரெய்டு' ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம்

/

'டாஸ்மாக்' நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதால் 'ரெய்டு' ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம்

'டாஸ்மாக்' நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதால் 'ரெய்டு' ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம்

'டாஸ்மாக்' நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதால் 'ரெய்டு' ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம்


ADDED : ஏப் 17, 2025 01:00 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில், டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தினோம்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

களங்கம்


சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட, இந்தச் சோதனை சட்ட விரோதமானது என்று அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில், அதிகாரிகளை துன்புறுத்த தடை விதிக்க கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் மீதான இறுதி விசாரணை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

டாஸ்மாக் சார்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதிட்டதாவது:

அமலாக்கத்துறையின் நடவடிக்கையால், நேரடியாக டாஸ்மாக் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. 2007 முதல் 2021 வரை, முறைகேடு நடந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது தான் ஞானம் வந்தது போல, விசாரணை நடத்துவது ஏன்? இன்று டாஸ்மாக், நாளை ஒவ்வொரு துறையும் குறிவைக்கப்படும்.

விசாரணை என்ற பெயரில் பெண் அதிகாரிகளை அடைத்து வைத்து, நள்ளிரவில் வீட்டுக்கு அனுப்பியது சரியானதா?

இவ்வாறு அவர்கள் வாதிட்டபோது, நீதிபதிகள் குறுக்கிட்டு, 'அனைத்து துறைகளிலும், ஊழலை ஒழிப்பது தானே அரசின் நோக்கம்' என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல், 'அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதை மாநில அரசு கவனித்துக் கொள்ளும்; அமலாக்கத்துறை அல்ல' என்றார்.

இதையடுத்து, அமலாக்கத் துறை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு வாதாடியதாவது:

முறைகேடு நடந்திருப்பதாக கருதினால், அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம். டாஸ்மாக் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் உள்ளது.

முறைகேடு


ஊழியர்கள், அதிகாரிகள் சிலர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தினோம்.

டாஸ்மாக் ஊழியர் ஒருவர் லஞ்சம் வாங்கினால், அதன் சங்கிலி என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டாமா; இதற்கும், உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என, தெரிந்து கொள்ள வேண்டாமா.

அதற்காகவே, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக் முறைகேடு வாயிலாக, 1,000 கோடி ரூபாய்க்கு மேல், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளது, சோதனையில் தெரிய வந்துள்ளது.

தள்ளிவைப்பு


டெண்டர், மதுபான கொள்முதல் என, அனைத்திலும் முறைகேடு நடந்துள்ளது. கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்பட்டதை, மேற்பார்வையாளர்களே ஒப்புக்கொண்டு உள்ளனர்.

இந்த முறைகேட்டை மறைக்க, உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆவணங்களும், தலைமை அலுவலகத்தில் பாதுகாக்கப்படும் என்பதால், அங்கு சோதனை நடத்தப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களும், தலைமை அலுவலகத்தில் உள்ளன. குறிப்பிட்ட முறையில் தான் விசாரணை நடத்த வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றாலும், முறைகேடு நடந்ததற்கான ஆவணங்களை மறைப்பதும் குற்றம் தான். சம்பந்தப்பட்ட நபர், ஊழல் தடுப்பு வழக்கில் குற்றம் சாட்டபட்டவராக இல்லை என்றாலும், சாட்சியாக அவரை சேர்க்கலாம்.

இவ்வாறு அவர் வாதாடினார்.

அமலாக்கத்துறையின் வாதம் நிறைவு பெறாததால், விசாரணை இன்று தள்ளி வைக்கப்பட்டது.

டாஸ்மாக், தமிழக அரசின், வாதங்கள் நிறைவு பெற்றதால், வரும் 22ம் தேதி எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தங்களையும் இணைத்து கொள்ளுமாறு, பா.ஜ., பிரமுகர் ஏ.மோகன் தாஸ், முரளிதரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்க மறுத்து விட்டனர்.






      Dinamalar
      Follow us