ADDED : ஜன 05, 2025 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்துக்கு, மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை சரியாகக் கொடுப்பதில்லை. ஆனால், அதைப் பற்றி கவலைப்படாமல், தமிழக அரசு சிரமப்பட்டு எல்லா விஷயங்களையும் செய்து வருகிறது. அமைச்சர் துரைமுருகன் மகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். தமிழக அரசுக்கும், தி.மு.க.,வுக்கும் நெருக்கடி கொடுக்கவே, இப்படிப்பட்ட சோதனைகள் நடத்தப்படுகின்றன. இப்படி, மத்திய அரசிடம் இருந்து நெருக்கடிகள் தான் வருகிறதே தவிர, நிதி வருவதில்லை. அதனாலேயே கடந்த பார்லிமென்ட் தேர்தலில், 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. இந்த சோதனைகளால், தி.மு.க.,வோ; தொண்டர்களோ துவண்டு போய்விட மாட்டர்.
-- பன்னீர்செல்வம்
வேளாண் துறை அமைச்சர்

