தாம்பரத்தில் இன்று, அண்ணா நகரில் நாளை 'இன்ஜி., கவுன்சிலிங்' வழிகாட்டி நிகழ்ச்சி
தாம்பரத்தில் இன்று, அண்ணா நகரில் நாளை 'இன்ஜி., கவுன்சிலிங்' வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : ஜூன் 28, 2025 03:17 AM

சென்னை: பிளஸ் 2 முடித்து, இன்ஜினியரிங் படிப்பில் சேர காத்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு உதவ, 'தினமலர்' நாளிதழ் சார்பில், சென்னை தாம்பரத்தில் இன்றும், அண்ணா நகரில் நாளையும், 'இன்ஜினியரிங் கவுன்சிலிங்' குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கலந்தாய்வு
தமிழக அரசு, தொழில்நுட்ப கல்வி இயக்ககம், டி.என்.இ.ஏ., இணையதளம் வாயிலாக நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்று, பி.இ., - பி.டெக்., படிக்க விரும்புவோருக்காக, 'தினமலர்' நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்துடன் இணைந்து, 'இன்ஜினியரிங் கவுன்சிலிங்' வழிகாட்டி' நிகழ்ச்சியை நடத்துகிறது.
இந்நிகழ்ச்சி இன்று காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, சென்னை தாம்பரம் ராஜகோபால திருமண மஹாலில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில், நவீன தொழில்நுட்ப படிப்புகளில் உள்ள வேலை வாய்ப்புகள், கோர் இன்ஜினியரிங் துறைகளின் எதிர்காலம், சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைமுறைகள், ஆன்லைன் கலந்தாய்வு அணுகுமுறைகள், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யும் விதம், கல்லுாரிகளின், 'கட் ஆப்' மதிப்பெண், வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்து, கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா ஆலோசனை வழங்க உள்ளார்.
இதே வழிகாட்டி நிகழ்ச்சி, அண்ணா நகர் மேற்கு, எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மற்றும் ஜூனியர் கல்லுாரி வளாகத்தில், நாளை காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெற உள்ளது. இதில், கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆலோசனை வழங்குகிறார்.
புதிய மாற்றங்கள்
இரண்டு நிகழ்ச்சிகளிலும், ஸ்ரீரங்கம் அரசு இன்ஜினியரிங் கல்லுாரி உதவி பேராசிரியர் ஜே.காளிதாஸ் பங்கேற்று, 'ஆன்லைன் கவுன்சிலிங்' நுணுக்கங்கள், சரியாக 'சாய்ஸ் பில்லிங்' பதிவிடுவதற்கான வழிமுறைகள், 'புரோவிஷனல் அலாட்மென்ட்' பெறுவது, கவுன்சிலிங் முறையில் இந்த ஆண்டு அறிமுகமாகி உள்ள புதிய மாற்றங்கள் குறித்த தகவல்களை அளிக்க உள்ளார்.
இந்நிகழ்ச்சிகளில், மாணவர்கள் தங்களின் பெற்றோருடன் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.
நிகழ்ச்சியில் பங்கேற்க, க்யூ.ஆர்., குறியீடை ஸ்கேன் செய்தோ, 95667 77833 என்ற வாட்ஸாப் எண்ணில் ஆர்.ஜி.என்., என குறுஞ்செய்தி அனுப்பியோ, கிடைக்கும் விண்ணப்பத்தை நிரப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம்