sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நீலகிரி தொகுதியில் இ.பி.எஸ்., போட்டியா...? ஐயோ... விபரமே தெரியலையே

/

நீலகிரி தொகுதியில் இ.பி.எஸ்., போட்டியா...? ஐயோ... விபரமே தெரியலையே

நீலகிரி தொகுதியில் இ.பி.எஸ்., போட்டியா...? ஐயோ... விபரமே தெரியலையே

நீலகிரி தொகுதியில் இ.பி.எஸ்., போட்டியா...? ஐயோ... விபரமே தெரியலையே


ADDED : மார் 02, 2024 01:14 AM

Google News

ADDED : மார் 02, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்:நீலகிரி லோக்சபா தொகுதி தனி தொகுதியாக இருந்தும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மூன்று லோக்சபா தேர்தல்களில், தி.மு.க., - எம்.பி., - ஆ.ராஜா இரண்டு முறை வெற்றி பெற்றார். ஒரு முறை அ.தி.மு.க.,வில் கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார். வரும் தேர்தலில், இந்த தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட, அன்னுார் எம்.எல்.ஏ., தனபாலின் மகன் லோகேஷ், குன்னுார் கவுன்சிலர் குருமூர்த்தி உட்பட 16 பேர், 15,000 ரூபாய் செலுத்தி தங்களது பெயரில் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர்.

இந்நிலையில், 'கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி போட்டியிட வேண்டும்' என, வலியுறுத்தி, அவர் பெயரில் விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனை அருவங்காடு ஜெகதளா பேரூராட்சி கவுன்சிலர் சஜீவன் கொடுத்துள்ளார். நீலகிரி தனி தொகுதி என்பது, இந்த கவுன்சிலருக்கு தெரியுமா; தெரியாதா? என்பது தான் கட்சியினரின் பேச்சாக உள்ளது.

சஜீவன் கூறுகையில், ''மூன்று தேர்தல்களில், தனி தொகுதியான நீலகிரி தொகுதி, பொது தொகுதியாக மாறும் என நினைத்து, முன்னாள் முதல்வருக்கு விருப்ப மனு அளித்தேன்,'' என்றார்.






      Dinamalar
      Follow us