sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு இ.பி.எஸ்., அஞ்சலி

/

கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு இ.பி.எஸ்., அஞ்சலி

கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு இ.பி.எஸ்., அஞ்சலி

கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு இ.பி.எஸ்., அஞ்சலி


ADDED : மார் 27, 2025 09:12 AM

Google News

ADDED : மார் 27, 2025 09:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலியில் நேற்று காலமான அ.தி.மு.க., அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு இன்று காலை கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: எம்ஜிஆரிடம் மிகுந்த மரியாதை பெற்றவர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் துணை பொதுச் செயலாளராக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றியவர். தென் மாவட்ட மக்களிடையே மிகுந்த மரியாதைக்குரியவராக திகழ்ந்தவர்.

நான் முதல்வராக பொறுப்பேற்றபோது நேரில் சந்தித்து, எனக்கு முழு ஆதரவு வழங்கியவர். 'தென் மாவட்டத்தில் உங்களுக்காக முழுமையாக துணை நிற்பேன்' என்று பலமுறை நேரில் வந்து கூறியவர்.

அவரது நினைவெல்லாம் எப்போதும் கட்சியே. அவருடைய மரணம் இயக்கத்திற்கு பேரிழப்பு.அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.






      Dinamalar
      Follow us