sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிரதமரிடம் பேசியதால் சிபில் ஸ்கோர் பிரச்னைக்கு தீர்வு; சொல்கிறார் இபிஎஸ்!

/

பிரதமரிடம் பேசியதால் சிபில் ஸ்கோர் பிரச்னைக்கு தீர்வு; சொல்கிறார் இபிஎஸ்!

பிரதமரிடம் பேசியதால் சிபில் ஸ்கோர் பிரச்னைக்கு தீர்வு; சொல்கிறார் இபிஎஸ்!

பிரதமரிடம் பேசியதால் சிபில் ஸ்கோர் பிரச்னைக்கு தீர்வு; சொல்கிறார் இபிஎஸ்!

14


UPDATED : ஜூலை 29, 2025 04:19 PM

ADDED : ஜூலை 29, 2025 11:17 AM

Google News

UPDATED : ஜூலை 29, 2025 04:19 PM ADDED : ஜூலை 29, 2025 11:17 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: ''விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் கேட்கக் கூடாது என்று வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்தோம். பிரதமரிடம் பேசியதால் சிபில் ஸ்கோர் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியதாவது: சிபில் ஸ்கோரால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பயிர் கடன் வழங்க சிபில் ஸ்கோர் கேட்கக்கூடாது. விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் கேட்கக் கூடாது என்று வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்தோம். பிரதமரிடம் பேசியதால் சிபில் ஸ்கோர்ட் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது.

பயிர் கடனுக்காக விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் பார்க்கும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பயிர் கடன் வழங்குவதில் பழைய நடைமுறையை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு முடிந்து போன விஷயம். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. எதுனாலும் நடக்கலாம்.

நாங்கள் எப்படி பதில் சொல்ல முடியும். யூகங்கள் அடிப்படையில் பதில் சொல்ல முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அந்தந்த கட்சிகள் அந்த நிலைப்பாட்டின் தான் முடிவு செய்வார்கள்.

எங்கள் கூட்டணியில் பாஜ உள்ளது. பாஜவில் பல கட்சிகள் இருக்கின்றன. இன்னும் 8 மாதம் காலம் இருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, கூட்டணியில் யார்,யார் இருக்கிறார்கள் என்று பத்திரிகையையும், ஊடகத்தையையும் வைத்து தெளிவாக நான் குறிப்பிடுகிறேன், நன்றி வணக்கம். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.






      Dinamalar
      Follow us