sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெளியே அம்மா உணவகம்! உள்ளே அரசு பள்ளி! 'பகீர்' கிளப்பிய இ.பி.எஸ்.

/

வெளியே அம்மா உணவகம்! உள்ளே அரசு பள்ளி! 'பகீர்' கிளப்பிய இ.பி.எஸ்.

வெளியே அம்மா உணவகம்! உள்ளே அரசு பள்ளி! 'பகீர்' கிளப்பிய இ.பி.எஸ்.

வெளியே அம்மா உணவகம்! உள்ளே அரசு பள்ளி! 'பகீர்' கிளப்பிய இ.பி.எஸ்.

1


ADDED : செப் 20, 2024 02:54 PM

Google News

ADDED : செப் 20, 2024 02:54 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; சென்னையில் அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவது அதிர்ச்சி அளித்துள்ளதாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பகீர் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது; அ.தி.மு.க., அரசில் செயல்படுத்தப்பட்ட பல நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா செய்துவந்த தி.மு.க., அரசு, தொடர்ந்து நாங்கள் ஏழை, எளிய, தொழிலாளர்களின் அட்சயப்பாத்திரமாக விளங்கும் அம்மா உணவகங்களை மூடக்கூடாது என்றும், தரமான உணவுகளை அம்மா உணவகங்களில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திவரும் நிலையில், இன்று சென்னை ஆலந்தூர் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக வெளிவந்த செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

இந்தியாவில் உள்ள மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து எல்லாம் அரசு பிரதிநிதிகள் தமிழகத்திற்கு வருகை தந்து அம்மா உணவகங்கள் இயங்குவதையும், தங்களது மாநிலங்களிலும், நாடுகளிலும் உடனடியாக அம்மா உணவகங்களை திறப்போம் என்று சொல்லி வரும் நிலையில், வெளி நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கும் முதல்வர் உடனடியாக ஆலந்தூரில் உள்ள அம்மா உணவகத்தை முழுமையாக நடத்தவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வேறொரு பாதுகாப்பான இடத்தை வழங்கிடவும் அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us