ADDED : ஜன 08, 2026 01:52 AM

ஈரோடு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:
பொங்கல் பரிசாக 3,000 ரூபாய் தருவதாக கூறுகின்றனர்; இதற்காக, 6,800 கோடி ரூபாய் செலவு செய்கின்றனர். எதை பற்றியும் கவலைப்படாமல், அரசு கஜானாவை காலி செய்து ஓட்டு வாங்க பார்க்கின்றனர்.
திருப்பரங்குன்றம் மலையில் விளக்கு ஏற்றிக்கொள்ள தீர்ப்பு வந்துவிட்டது. அதற்கு ஏன் மேல்முறையீடு? தேவையே இல்லை.
சமூக நல்லிணக்கம் கெடாமல் இருக்க, இரு மத பெரியவர்களையும் அழைத்து, கோவில் வழிபாடு மற்றும் தர்கா வழிபாடு குறித்து பேசி தீர்வு கண்டிருக்க வேண்டும்.
பல மாதங்களாக இப்பிரச்னையை வேண்டுமென்றே இழுத்தது, தி.மு.க., அரசு தான்; சிறுபான்மை மக்கள் ஓட்டுகளை பெறுவதற்காகவே, மக்களை துாண்டிவிட்டு போராட வைத்தது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்ட அளவுக்கு, அ.தி.மு.க.,வினரே பழனிசாமியை ஏற்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

