sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எதிர்க்கட்சிகள் ஓட்டு வங்கி ஒன்றானாலும் தி.மு.க.,வை மிஞ்ச முடியாது: ரகுபதி

/

எதிர்க்கட்சிகள் ஓட்டு வங்கி ஒன்றானாலும் தி.மு.க.,வை மிஞ்ச முடியாது: ரகுபதி

எதிர்க்கட்சிகள் ஓட்டு வங்கி ஒன்றானாலும் தி.மு.க.,வை மிஞ்ச முடியாது: ரகுபதி

எதிர்க்கட்சிகள் ஓட்டு வங்கி ஒன்றானாலும் தி.மு.க.,வை மிஞ்ச முடியாது: ரகுபதி


ADDED : பிப் 13, 2025 07:48 PM

Google News

ADDED : பிப் 13, 2025 07:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''அனைத்து எதிர்க்கட்சிகளின் ஓட்டு வங்கி ஒன்று சேர்ந்தாலும், தி.மு.க., ஓட்டு வங்கியை மிஞ்ச முடியாது'' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

அவரது பேட்டி:

கருத்து கணிப்புகளை, நாங்கள் நம்புவது கிடையாது. எனினும், அதற்கும் ஒரு வலிமை உண்டு. 'இன்று லோக்சபா தேர்தல் நடந்தால், தி.மு.க., கூட்டணி, 39 தொகுதிகளில் வெற்றி பெறும்' என, 'இந்தியா டுடே' பத்திரிகையுடன், 'சி வோட்டர்ஸ்' இணைந்து நடத்திய, கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில், 47 சதவீதம் ஓட்டுகளை வாங்கிய, தி.மு.க., கூட்டணி, 52 சதவீதம் ஓட்டுகளைப் பெறும். அ.தி.மு.க., ஓட்டு சதவீதம், 23ல் இருந்து 20 ஆக குறையும். தே.ஜ., கூட்டணி 21 சதவீதம் ஓட்டுகளைப் பெறும் என, கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களை பொருத்தவரை, 52 சதவீதம் என்பதை இன்னும் உயர்த்த, முதல்வர், துணை முதல்வர் பணிகளை மேற்கொள்வர். 'அ.தி.மு.க.,வில் பழனிசாமி, வேலுமணி, தங்கமணி என யாராக இருந்தாலும், எனக்கு ஜூனியர் தான்' என, செங்கோட்டையன், தன் நண்பர்களுடன் பேசிய தகவல் வந்திருக்கிறது. இதிலிருந்து அவர் எந்த அளவிற்கு ஆதங்கத்தில் இருக்கிறார் என்பதையும், அங்கு இருக்கும் சீனியர்கள் எந்தளவிற்கு ஆதங்கத்தில் உள்ளனர் என்பதும் தெரிய வருகிறது.

கண்ணுக்கு தெரிந்த வரை எதிரிகளே இல்லை என, ஜெயலலிதா கூறினார். நாங்கள் எதிரிகள் இல்லை என, சொல்லவில்லை. எதிரிகள் இருக்கின்றனர். அவர்களுடைய ஓட்டு வங்கி குறைந்தது விட்டது என, சொல்கிறோம். அனைத்து எதிர்க்கட்சிகளின் ஓட்டு வங்கி ஒன்று சேர்ந்தாலும், எங்கள் ஓட்டு வங்கியை மிஞ்ச முடியாது. அதற்கு ஏற்றாற் போல், மக்கள் விரும்பும் ஆட்சியை, முதல்வர் நடத்திக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us