sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ராஜு வீட்டை முற்றுகையிடுவோம்' முன்னாள் ராணுவத்தினர் மிரட்டல்

/

'ராஜு வீட்டை முற்றுகையிடுவோம்' முன்னாள் ராணுவத்தினர் மிரட்டல்

'ராஜு வீட்டை முற்றுகையிடுவோம்' முன்னாள் ராணுவத்தினர் மிரட்டல்

'ராஜு வீட்டை முற்றுகையிடுவோம்' முன்னாள் ராணுவத்தினர் மிரட்டல்

1


ADDED : மே 25, 2025 03:44 AM

Google News

ADDED : மே 25, 2025 03:44 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: இந்திய ராணுவம், பாக்., பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்திய ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, பலரும் ராணுவத்தை பாராட்டி வந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து, கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, ராணுவ வீரர்களை விமர்சிப்பது போல கூறிவிட்டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததும், தன் 'எக்ஸ்' தள பக்கத்தில் மன்னிப்பு கோரினார் ராஜு.

ஆனால், அதை ஏற்காத முன்னாள் ராணுவத்தினர் நலச் சங்கத்தினர், செல்லுார் ராஜுவை எதிர்த்து, திருச்சியில், சங்கத் தலைவர் நவநீதம் கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின், திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்ற சங்கத்தினர், ராஜு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.

இதுகுறித்து, முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தின் தலைவர் நவநீதம் கிருஷ்ணன் கூறுகையில், “ராணுவ வீரர்களை, எந்த இடத்தில் இருந்து அவதுாறாக பேசினாரோ, அதே இடத்திற்கு வந்து நிருபர்கள் மத்தியில் மன்னிப்பு கோர வேண்டும்.

''இல்லையென்றால், அவரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்,” என்றார்.






      Dinamalar
      Follow us